பொதுமக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடி - அண்ணாமலை புகழாரம்!
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுமக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடி – அண்ணாமலை புகழாரம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 30, 2025, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திற்கு எதிராக எந்த திட்டத்தையும்  பிரதமர் மோடி கொண்டு வர மாட்டார் என  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலூர் அருகே அரிட்டாபட்டியில் செயல்படுத்தப்படவிருந்த டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது. இதனைத்தொடர்ந்து அ.வல்லாளப்பட்டியில் இன்று பாராட்டு விழா நடை பெற்றது. இந்த விழாவில் தமிழக பா’ஜக மாநில தலைவர்  அண்ணாமலை  கலந்துகொண்டு பேசியதாவது :

பிரதமர் மோடியை அழைத்து வர ஆசை.  பிரதமர் மோடி சார்பாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வந்துள்ளார். இந்த பகுதியை சேர்ந்த முக்கிய அம்பலகாரர்களை  டெல்லி சென்று மத்திய  அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க வைத்ததாகவும் , அவர் உறுதியளித்தப்படி டங்ஸ்டன் திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பொதுமக்களின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சர் இந்த விழாவில் பங்கேற்க வந்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

மத்திய அரசின் திட்டத்தை ரத்து செய்வது எளிதான காரியமல்ல என்றும், 24 மணி நேரத்தில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து அமைச்சர் கிஷன் ரெட்டி நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

இப்பகுதி மக்களின் போராட்டம் மிக நியாமான போராட்டம்  என்றும், பிரதமர் மோடி தமிழக மக்களின் உணர்வோடு கலந்தவர் என்றும் அவர் தெரிவித்தார். ஜல்லிகட்டு போட்டியை திரும்ப கொண்டு வந்தது பிரதமர் மோடி அரசு என்றும் அண்ணாமலை  குறிப்பிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் போடப்பட்டதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை  என்றும்,  சட்டசபையில் வாராவாரம் தீர்மானம் போடுகிறீர்கள். அது எல்லாம் நடக்கிறதா? மாநில அரசு மிரட்டலுக்கு எல்லாம் மோடி பயந்தவர் இல்லை. என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.  உக்ரைன்- ரஷ்யாவில் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் மோடி, மாநில அரசுக்கு பயப்படுகிறாரா? எனறும் அண்ணாமலை கேள்வி  எழுப்பினார்.

பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மோடி  இந்த திட்டத்தை ரத்து செய்ததாக  தெரிவித்தார். மாநில அரசுக்கு பயந்து டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்றும், மக்களின் அன்புக்கு அடிபணிந்து திட்டத்தை ரத்து செய்துள்ளதாகவும் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தமிழக அரசு வழக்கு போட்டதையும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார். இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமடாக  மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு மீது நம்பிக்கை வையுங்கள் என்றும், இந்தியாவுக்கே சான்றாக இந்த நிகழ்ச்சி நடந்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

Tags: MaduraiannamalaiMinister Kishan Reddytungsten project canceled.
ShareTweetSendShare
Previous Post

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து – விழாவில் பங்கேற்க சென்ற அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

சென்னையில் அழுகிய நிலையில் தந்தை, மகள் உடல் மீட்பு – போலீஸ் தீவிர விசாரணை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies