பொதுமக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடி - அண்ணாமலை புகழாரம்!
Jul 31, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுமக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடி – அண்ணாமலை புகழாரம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 30, 2025, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திற்கு எதிராக எந்த திட்டத்தையும்  பிரதமர் மோடி கொண்டு வர மாட்டார் என  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலூர் அருகே அரிட்டாபட்டியில் செயல்படுத்தப்படவிருந்த டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது. இதனைத்தொடர்ந்து அ.வல்லாளப்பட்டியில் இன்று பாராட்டு விழா நடை பெற்றது. இந்த விழாவில் தமிழக பா’ஜக மாநில தலைவர்  அண்ணாமலை  கலந்துகொண்டு பேசியதாவது :

பிரதமர் மோடியை அழைத்து வர ஆசை.  பிரதமர் மோடி சார்பாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வந்துள்ளார். இந்த பகுதியை சேர்ந்த முக்கிய அம்பலகாரர்களை  டெல்லி சென்று மத்திய  அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க வைத்ததாகவும் , அவர் உறுதியளித்தப்படி டங்ஸ்டன் திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பொதுமக்களின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சர் இந்த விழாவில் பங்கேற்க வந்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

மத்திய அரசின் திட்டத்தை ரத்து செய்வது எளிதான காரியமல்ல என்றும், 24 மணி நேரத்தில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து அமைச்சர் கிஷன் ரெட்டி நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

இப்பகுதி மக்களின் போராட்டம் மிக நியாமான போராட்டம்  என்றும், பிரதமர் மோடி தமிழக மக்களின் உணர்வோடு கலந்தவர் என்றும் அவர் தெரிவித்தார். ஜல்லிகட்டு போட்டியை திரும்ப கொண்டு வந்தது பிரதமர் மோடி அரசு என்றும் அண்ணாமலை  குறிப்பிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் போடப்பட்டதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை  என்றும்,  சட்டசபையில் வாராவாரம் தீர்மானம் போடுகிறீர்கள். அது எல்லாம் நடக்கிறதா? மாநில அரசு மிரட்டலுக்கு எல்லாம் மோடி பயந்தவர் இல்லை. என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.  உக்ரைன்- ரஷ்யாவில் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் மோடி, மாநில அரசுக்கு பயப்படுகிறாரா? எனறும் அண்ணாமலை கேள்வி  எழுப்பினார்.

பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மோடி  இந்த திட்டத்தை ரத்து செய்ததாக  தெரிவித்தார். மாநில அரசுக்கு பயந்து டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்றும், மக்களின் அன்புக்கு அடிபணிந்து திட்டத்தை ரத்து செய்துள்ளதாகவும் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தமிழக அரசு வழக்கு போட்டதையும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார். இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமடாக  மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு மீது நம்பிக்கை வையுங்கள் என்றும், இந்தியாவுக்கே சான்றாக இந்த நிகழ்ச்சி நடந்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

Tags: MaduraiannamalaiMinister Kishan Reddytungsten project canceled.
ShareTweetSendShare
Previous Post

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து – விழாவில் பங்கேற்க சென்ற அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

சென்னையில் அழுகிய நிலையில் தந்தை, மகள் உடல் மீட்பு – போலீஸ் தீவிர விசாரணை!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies