பொதுமக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடி - அண்ணாமலை புகழாரம்!
Sep 14, 2026, 02:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுமக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடி – அண்ணாமலை புகழாரம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 30, 2025, 05:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்திற்கு எதிராக எந்த திட்டத்தையும்  பிரதமர் மோடி கொண்டு வர மாட்டார் என  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலூர் அருகே அரிட்டாபட்டியில் செயல்படுத்தப்படவிருந்த டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது. இதனைத்தொடர்ந்து அ.வல்லாளப்பட்டியில் இன்று பாராட்டு விழா நடை பெற்றது. இந்த விழாவில் தமிழக பா’ஜக மாநில தலைவர்  அண்ணாமலை  கலந்துகொண்டு பேசியதாவது :

பிரதமர் மோடியை அழைத்து வர ஆசை.  பிரதமர் மோடி சார்பாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வந்துள்ளார். இந்த பகுதியை சேர்ந்த முக்கிய அம்பலகாரர்களை  டெல்லி சென்று மத்திய  அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க வைத்ததாகவும் , அவர் உறுதியளித்தப்படி டங்ஸ்டன் திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பொதுமக்களின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சர் இந்த விழாவில் பங்கேற்க வந்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

மத்திய அரசின் திட்டத்தை ரத்து செய்வது எளிதான காரியமல்ல என்றும், 24 மணி நேரத்தில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து அமைச்சர் கிஷன் ரெட்டி நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

இப்பகுதி மக்களின் போராட்டம் மிக நியாமான போராட்டம்  என்றும், பிரதமர் மோடி தமிழக மக்களின் உணர்வோடு கலந்தவர் என்றும் அவர் தெரிவித்தார். ஜல்லிகட்டு போட்டியை திரும்ப கொண்டு வந்தது பிரதமர் மோடி அரசு என்றும் அண்ணாமலை  குறிப்பிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் போடப்பட்டதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை  என்றும்,  சட்டசபையில் வாராவாரம் தீர்மானம் போடுகிறீர்கள். அது எல்லாம் நடக்கிறதா? மாநில அரசு மிரட்டலுக்கு எல்லாம் மோடி பயந்தவர் இல்லை. என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.  உக்ரைன்- ரஷ்யாவில் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் மோடி, மாநில அரசுக்கு பயப்படுகிறாரா? எனறும் அண்ணாமலை கேள்வி  எழுப்பினார்.

பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மோடி  இந்த திட்டத்தை ரத்து செய்ததாக  தெரிவித்தார். மாநில அரசுக்கு பயந்து டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்றும், மக்களின் அன்புக்கு அடிபணிந்து திட்டத்தை ரத்து செய்துள்ளதாகவும் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தமிழக அரசு வழக்கு போட்டதையும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார். இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமடாக  மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு மீது நம்பிக்கை வையுங்கள் என்றும், இந்தியாவுக்கே சான்றாக இந்த நிகழ்ச்சி நடந்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

Tags: MaduraiannamalaiMinister Kishan Reddytungsten project canceled.
Share
Tweet
SendShare
Previous Post

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து – விழாவில் பங்கேற்க சென்ற அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

சென்னையில் அழுகிய நிலையில் தந்தை, மகள் உடல் மீட்பு – போலீஸ் தீவிர விசாரணை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies