குடியரசு தலைவர் மாளிகையில் 'திருமண வைபவம்' : பாதுகாப்பு அதிகாரிக்கு கிடைத்த 'ஜாக்பாட்' வாய்ப்பு!
Jan 14, 2026, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குடியரசு தலைவர் மாளிகையில் ‘திருமண வைபவம்’ : பாதுகாப்பு அதிகாரிக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’ வாய்ப்பு!

Murugesan M by Murugesan M
Feb 4, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் சிஆர்பிஎஃப் பெண் அதிகாரி ஒருவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது பல தரப்பினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு படையில் இளம் பெண் அதிகாரி ஒருவர் இருப்பதாகக் கூறி, அண்மையில் வெளியான பல செய்திகளை நாம் பார்த்திருப்போம். அந்த பெண் அதிகாரிதான் CRPF உதவி கமான்டண்டான பூனம் குப்தா. ஆனால், அவர் பிரதமரின் பாதுகாப்பு படையில் இல்லை, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

மத்திய பிரதேச மாநிலம், சிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவரான பூனம் குப்தா, கணிதத்தில் இளங்கலை பட்டமும், ஆங்கிலத்தில் முதுகலை பட்டமும், குவாலியர் சிவாஜி பல்கலைக்கழகத்தில் இருந்து B.Ed பட்டமும் பெற்றவர். கடந்த 2018-ம் ஆண்டு UPSC-யின் CAPF தேர்வு எழுதிய பூனம் குப்தா தேசிய அளவில் 81-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றார். பின்னர் CRPF உதவி கமான்டண்டாக பொறுப்பேற்ற அவருக்கு, முதல் போஸ்டிங்கே நக்சல் தாக்கம் அதிகமுள்ள பீகார் பகுதியில்தான்.

அங்கு பூனம் குப்தா அர்பணிப்புடன் ஆற்றிய பணி அவரின் புகழை குடியரசு தலைவர் மாளிகை வரை கொண்டு சென்றது. அதன் பலனாகவே குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின், தனி பாதுகாப்பு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார் பூனம் குப்தா. இந்நிலையில், இவருக்கும், ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் மற்றொரு CRPF உதவி கமான்டண்டான அவ்னேஷ் குமாருக்கும் வரும் 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

பூனம் குப்தாவின் சிறப்பான பணி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் மனதை வெகுவாக கவர, அவரது திருமணம் பற்றி கேள்விப்பட்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ராஷ்டிரபதி பவனில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில், திருமண வைபத்தை நடத்த பூனம் குப்தாவுக்கு அறிவுறுத்தி அதற்குரிய அனுமதியையும் வழங்கியிருக்கிறார்.

இதன் மூலம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி பூனம் குப்தா – அவ்னேஷ் குமார் திருமணம் குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நடைபெறவுள்ளது. உரிய பாதுகாப்பு சோதனைகளுக்கு பின் திருமண நிகழ்வில் பங்கேற்க குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைதளத்தில் மிக ACTIVE ஆக இருந்து வரும் பூனம் குப்தா, தனது பணி மற்றும் வாழ்க்கை குறித்த UPDATES-கள், WOMEN EMPOWERMENT மற்றும் மாணவர்களுக்கான அறிவுரைகள் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

ஒரு ராஜ வம்சத்து பெண்ணுக்கே கிடைக்காத இத்தகைய வாய்ப்பு, குடியரசு தலைவரின் பாதுகாப்பு பிரிவில் உள்ள இளம் பெண் அதிகாரிக்கு கிடைத்திருக்கிறது என்றால், அதைக்கேட்டு அனைவரும் வாய்பிளப்பதில் ஆச்சரியம் இல்லைதானே.

Tags: President HouseIndia'Wedding ceremony' at the President's House: 'Jackpot' chance for a security officer!
ShareTweetSendShare
Previous Post

அதிகரிக்கும் பதின்ம வயது கர்ப்பம்: காரணம் என்ன?

Next Post

டிரம்புக்கு கனடா பதிலடி : உலக பொருளாதாரத்தை சீர்குலைக்கும் “வர்த்தக போர்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies