அதிகரிக்கும் பதின்ம வயது கர்ப்பம்: காரணம் என்ன?
Aug 7, 2026, 10:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

அதிகரிக்கும் பதின்ம வயது கர்ப்பம்: காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Feb 4, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் 19 வயது நிரம்பாத பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்துள்ளது. பதின்ம வயது பெண்கள் கர்ப்பமடைய என்ன காரணம் என்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டுல 15-ல இருந்து 19 வயதுக்குட்ப்பட்ட இளம்பெண்கள்ள கர்ப்பிணியா இருக்க இளம் பெண்களோட எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது சுமார் 20 சதவீதம் அதிகரிச்சுயிருக்குறதா தகவல் வெளியாகியிருக்கு… தமிழகத்துல கர்ப்பிணிகளின் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட 7 சதவீதம் குறைஞ்சு இளம் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிச்சுயிருக்கு.

குறிப்பா இந்தியாவுல 15-ல இருந்து 19 வயதுக்குட்பட்ட பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிகழ்வுகள் நகரங்களைவிட கிராமங்கள்ள அதிகம் நடைபெறுவதா மத்திய அரசின் தரவுகள்ள தெரிவிக்கப்பட்ருக்கு…

தமிழகத்தில டீன் ஏஜ் கர்ப்பிணிகள் அதிகரிக்க என்ன காரணம் ? தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்துல டீன் ஏஜ் கர்ப்பிணிகள் அதிகம் ? இதையெல்லாம்தான் இந்த தொகுப்புல நாம பார்க்கபோறோம்.

2019 – 20 காலகட்டத்துல தமிழகத்துல சுமார் 10. 2 லட்சம் பெண்கள் குழந்தைகள பெற்றுக்கொண்ட நிலையில … அந்த எண்ணிக்கை 2023 – 24-ல 9.5 லட்சமா சரிவை சந்திச்சுயிருக்கு.

13ல இருந்து 19 வயதுடைய பெண்கள்ள 11772 பேர் 2019 – 20 காலகட்டத்துல குழந்தைகள பெற்றுள்ள நிலையில அதுவே 2023 – 24 காலகட்டத்துல அந்த எண்ணிக்கை 14360-ஆ அதிகரிச்சுயிருக்கு.

தமிழ்நாட்டுல 2023 – 24 ஆண்டுல குழந்தைகள பெற்றுக்கொண்ட மொத்த பெண்களின் எண்ணிக்கைள 1.5 சதவீதம் பெண்கள் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது… இதுவே 2019- 20 காலக்கட்டத்துல இதுவே 1.1 சதவீதமா குறைஞ்சியிருந்தது… கிட்டதட்ட 0.4 சதவீதம் கடந்த ஐந்து வருடங்கள்ள அதிகரிச்சுயிருக்குனு தேசிய குடும்ப நலன் ஆய்வறிக்கையில தெரிவிச்சியிருக்காங்க.

நாகப்பட்டினம் , தேனி, பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் இளம் கர்ப்பிணிகள அதிகம் கொண்ட
மாவட்டங்களா பார்க்கப்படுகிறது. அதுவே காஞ்சிபுரம், சிவகங்கை , விருதுநகர் , நாகர்கோவில் மற்றும் சென்னையில பார்த்தோம்னா இளம் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை சற்று குறைவுனுதான் சொல்லனும்.

இதுவே இந்தியா அளவுல பார்த்தோம்னா மேற்கு வங்கம் , அசாம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள்ள டீன் ஏஜ் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகமா இருக்குறதா தேசிய குடும்ப நல ஆய்வுல தெரியவந்துருக்கு…

சரி… இந்தியாவுல குறிப்பா தமிழ்நாட்டுல பதின்ம வயது கர்ப்பிணிகள் அதிகரிக்க என்ன காரணம்றத தற்போது பார்க்கலாம்.

1. ஆரம்பகால திருமணம் அல்லது காதல் திருமணம்

2. சமூகம் மற்றும் சமூக அழுத்தம்

3. பாலியம் துஷ்பிரயோகம்

4. கொரோனா ஊரடங்கால் ஏற்ப்பட்ட வறுமை , குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி

5. விழிப்புணர்வு இல்லாதது

இளம் வயதிலேயே குழந்தைகளை பெற்றுக்கொள்வதால் பெண்களின் உடலில் பல பிரச்சனைகள் ஏற்ப்படுகின்றன

1. இளம் வயதில் கருப்பை முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது…

2. குறைப்பிரசவத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம்

3. பனிக்குடத்தில் போதுமான அளவு நீர் இருக்காது.. இதனால் கருப்பை சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடுகிறது…

4. குழந்தை பிறந்த பிறகு அதிக ரத்தபோக்கு ஏற்படலாம்

5. நஞ்சுக்கொடி வெளியே வரமுடியாமல் தாய் உயிரிழக்க நேரிடும்…

இளம் கர்ப்பிணிகள் அதிகரிப்பதை தடுக்கும் விதமா அரசாங்கம் பள்ளி மற்றும் கல்லூரிகள்ள விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்தவேண்டியது அவசியம்… அதேசமயம் பெண்களுக்கான அதிகார்வபூர்வ திருமண வயதை இந்தியாவுல அதிகரிச்சால் மட்டுமே டீன் ஏஜ் கர்ப்பிணிகளின் எண்ணிகையை குறைக்கமுடியும்.

Tags: Tamil Nadutamil janam tvTeenage Pregnancy on the Rise: What's the Cause?
Share
Tweet
SendShare
Previous Post

பத்திரிகையாளர்களை துன்புறுத்த கூடாது : காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

குடியரசு தலைவர் மாளிகையில் ‘திருமண வைபவம்’ : பாதுகாப்பு அதிகாரிக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’ வாய்ப்பு!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies