தமிழகத்திலிருந்து யார் முயற்சித்தாலும் பெரிய இடத்திற்கு வரலாம் என ஜூனியர் மகளிர் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தமிழக வீராங்கனை கமலினி தெரிவித்தார்.
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் இடம் பிடித்திருந்த தமிழக வீராங்கனை கமலினி சென்னை திரும்பினார். சென்னை மீனம்பாக்கத்தில் அவரது குடும்பத்தினர் கமலினிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இருந்து யாரும் முயற்சித்தாலும் பெரிய இடத்துக்கு வரலாம் என்றும், தமிழக அரசு திறமை உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கூறினார்.