நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை வரும் 12ம் தேதி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், 12ம் தேதி மீண்டும் சேவை தொடங்கவுள்ளது. மேலும், செவ்வாய்க் கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் கப்பல் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.