தை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கருட வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கருட வாகன புறப்பாட்டை கண்டு வழிபட்டனர்.