மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீது தாக்குதல் - எல்.முருகன் கண்டனம்!
Mar 15, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீது தாக்குதல் – எல்.முருகன் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2025, 09:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீதான தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  அவர் விடுத்துள்ள பதிவில், ‘சமூகநீதிப் பாதுகாவலன்’ என்ற வார்த்தை ஜாலங்களோடு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ‘போலி திராவிட மாடல்’ அரசின் திராணியற்ற நிர்வாகத் திறனுக்கு சான்றாய்,  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்றுள்ள சம்பவத்திற்கு, எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் புல்லட் பைக் ஓட்டியதைச் சொல்லி, பட்டியல் சமுதாய இளைஞரின் கையை ஒரு சாதிவெறி கொண்ட கும்பல். வெட்டியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறைகளின் எண்ணிக்கையானது, பொதுமக்களிடத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்ற வகையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.,

பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற வன்முறைகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளவும், அதன் மூலம் அவர்களுக்கு இருக்கிற இடர்களை களைந்திடவும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் அமைக்கப்பட்ட ‘விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுவின்’ தலைவராக உள்ளவர், அரசு அதிகாரியோ அல்லது அமைச்சரோ அல்ல; முதல்வர் ஸ்டாலின் தான் என அவர் கூறியுள்ளார்.

பட்டியல் சமுதாய மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட இந்தக் குழுவின் தலைவராக இருந்துவரும் நீங்கள், எத்தனை முறை மாநில அளவிலான கூட்டங்கள் நடத்தியுள்ளீர்கள் என்று விளக்கமளிக்க முடியுமா? உங்களின் சமூகநீதி பரிபாலனைகளை தெரிந்து கொள்ள தமிழக மக்களாகிய நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மாறாக, வேங்கை வயல் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட சமுதாய மக்களையே குற்றவாளியாக்கி வேடிக்கை பார்ப்பதும், தமிழ் நிலத்தை சாதியக் கொடுமைகள் நிகழும் களமாய் மாற்றிக் கொண்டிருப்பதும் தான் உங்களது சமூகநீதி சாதனைப் பட்டியல் என்றால், விரைவில் தூக்கி எறியப்படுவீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உகந்த நீதியும், இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த தண்டனையும் பெற்றுத் தராவிட்டால், தமிழகம் தன் வரலாற்றில் கண்ட மிக மோசமான முதல்வர் என்ற பட்டியலில் முதலிடம் பிடிப்பீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: MK Stalinminister l muruganManamaduraiScheduled Community youth attacked
ShareTweetSendShare
Previous Post

சேலம் மத்திய சிறையில் மர்மமான முறையில் கைதி உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம்!

Next Post

மின்கம்பம் மீது மோதி நிற்காமல் சென்ற கனரக லாரி – விரட்டிப்பிடித்த கிராம மக்கள் !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies