மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீது தாக்குதல் - எல்.முருகன் கண்டனம்!
Jan 14, 2026, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீது தாக்குதல் – எல்.முருகன் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2025, 09:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீதான தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  அவர் விடுத்துள்ள பதிவில், ‘சமூகநீதிப் பாதுகாவலன்’ என்ற வார்த்தை ஜாலங்களோடு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ‘போலி திராவிட மாடல்’ அரசின் திராணியற்ற நிர்வாகத் திறனுக்கு சான்றாய்,  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்றுள்ள சம்பவத்திற்கு, எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் புல்லட் பைக் ஓட்டியதைச் சொல்லி, பட்டியல் சமுதாய இளைஞரின் கையை ஒரு சாதிவெறி கொண்ட கும்பல். வெட்டியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறைகளின் எண்ணிக்கையானது, பொதுமக்களிடத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்ற வகையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.,

பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற வன்முறைகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளவும், அதன் மூலம் அவர்களுக்கு இருக்கிற இடர்களை களைந்திடவும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் அமைக்கப்பட்ட ‘விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுவின்’ தலைவராக உள்ளவர், அரசு அதிகாரியோ அல்லது அமைச்சரோ அல்ல; முதல்வர் ஸ்டாலின் தான் என அவர் கூறியுள்ளார்.

பட்டியல் சமுதாய மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட இந்தக் குழுவின் தலைவராக இருந்துவரும் நீங்கள், எத்தனை முறை மாநில அளவிலான கூட்டங்கள் நடத்தியுள்ளீர்கள் என்று விளக்கமளிக்க முடியுமா? உங்களின் சமூகநீதி பரிபாலனைகளை தெரிந்து கொள்ள தமிழக மக்களாகிய நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மாறாக, வேங்கை வயல் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட சமுதாய மக்களையே குற்றவாளியாக்கி வேடிக்கை பார்ப்பதும், தமிழ் நிலத்தை சாதியக் கொடுமைகள் நிகழும் களமாய் மாற்றிக் கொண்டிருப்பதும் தான் உங்களது சமூகநீதி சாதனைப் பட்டியல் என்றால், விரைவில் தூக்கி எறியப்படுவீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உகந்த நீதியும், இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த தண்டனையும் பெற்றுத் தராவிட்டால், தமிழகம் தன் வரலாற்றில் கண்ட மிக மோசமான முதல்வர் என்ற பட்டியலில் முதலிடம் பிடிப்பீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: MK Stalinminister l muruganManamaduraiScheduled Community youth attacked
ShareTweetSendShare
Previous Post

சேலம் மத்திய சிறையில் மர்மமான முறையில் கைதி உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம்!

Next Post

மின்கம்பம் மீது மோதி நிற்காமல் சென்ற கனரக லாரி – விரட்டிப்பிடித்த கிராம மக்கள் !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies