மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீது தாக்குதல் - எல்.முருகன் கண்டனம்!
Jul 28, 2026, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீது தாக்குதல் – எல்.முருகன் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2025, 09:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீதான தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  அவர் விடுத்துள்ள பதிவில், ‘சமூகநீதிப் பாதுகாவலன்’ என்ற வார்த்தை ஜாலங்களோடு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ‘போலி திராவிட மாடல்’ அரசின் திராணியற்ற நிர்வாகத் திறனுக்கு சான்றாய்,  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்றுள்ள சம்பவத்திற்கு, எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் புல்லட் பைக் ஓட்டியதைச் சொல்லி, பட்டியல் சமுதாய இளைஞரின் கையை ஒரு சாதிவெறி கொண்ட கும்பல். வெட்டியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறைகளின் எண்ணிக்கையானது, பொதுமக்களிடத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்ற வகையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.,

பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற வன்முறைகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளவும், அதன் மூலம் அவர்களுக்கு இருக்கிற இடர்களை களைந்திடவும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் அமைக்கப்பட்ட ‘விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுவின்’ தலைவராக உள்ளவர், அரசு அதிகாரியோ அல்லது அமைச்சரோ அல்ல; முதல்வர் ஸ்டாலின் தான் என அவர் கூறியுள்ளார்.

பட்டியல் சமுதாய மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட இந்தக் குழுவின் தலைவராக இருந்துவரும் நீங்கள், எத்தனை முறை மாநில அளவிலான கூட்டங்கள் நடத்தியுள்ளீர்கள் என்று விளக்கமளிக்க முடியுமா? உங்களின் சமூகநீதி பரிபாலனைகளை தெரிந்து கொள்ள தமிழக மக்களாகிய நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மாறாக, வேங்கை வயல் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட சமுதாய மக்களையே குற்றவாளியாக்கி வேடிக்கை பார்ப்பதும், தமிழ் நிலத்தை சாதியக் கொடுமைகள் நிகழும் களமாய் மாற்றிக் கொண்டிருப்பதும் தான் உங்களது சமூகநீதி சாதனைப் பட்டியல் என்றால், விரைவில் தூக்கி எறியப்படுவீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உகந்த நீதியும், இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த தண்டனையும் பெற்றுத் தராவிட்டால், தமிழகம் தன் வரலாற்றில் கண்ட மிக மோசமான முதல்வர் என்ற பட்டியலில் முதலிடம் பிடிப்பீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: MK Stalinminister l muruganManamaduraiScheduled Community youth attacked
ShareTweetSendShare
Previous Post

சேலம் மத்திய சிறையில் மர்மமான முறையில் கைதி உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம்!

Next Post

மின்கம்பம் மீது மோதி நிற்காமல் சென்ற கனரக லாரி – விரட்டிப்பிடித்த கிராம மக்கள் !

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies