காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ந்திட வழிவகுத்து, அதற்கான வாழ்த்துச் செய்தியுடன் ஊக்கமளித்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உயரிய கருப்பொருளோடு, இன்று தொடங்கும் மூன்றாவது காசித் தமிழ்ச் சங்கமம் நிகழ்வானது, தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்தும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
பல நூற்றாண்டு கால கலாச்சார உறவினை மேம்படுத்தும் நல் நோக்கோடும், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கூற்றோடும், தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்பெருவிழா நிகழ்ந்திட வழிவகுத்து, அதற்கான வாழ்த்துச் செய்தியுடன் ஊக்கமளித்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.