விண்கல் பூமியை தாக்க வாய்ப்பு : இந்தியாவுக்கு ஆபத்தா? - சிறப்பு கட்டுரை!
Aug 14, 2025, 12:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்கல் பூமியை தாக்க வாய்ப்பு : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Feb 16, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விண்கற்களால் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என தொடர்ந்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.அந்த வகையில்,வரும் 2032 ஆம் ஆண்டில் YR 4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக நாசா அறிவித்துள்ளது. எந்த நாடுகளை இந்த விண்கல் தாக்கும்? அதன் பாதிப்புக்கள் எப்படி இருக்கும் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சர்வதேச அளவில், பல்வேறு விண்வெளி ஆய்வு மையங்கள் விண்கற்களைக் கண்டுபிடித்து ஆய்வு செய்து வருகின்றன. தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றன. கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட விண்கல் தான் YR4. இது பூமிக்கு மிக நெருக்கமாக இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

YR 4 என்ற விண்கல் 130 முதல் 300 அடி வரை குறுக்களவு கொண்டதாகும். மேலும் சுமார் 40 முதல் 100 மீட்டர் அகலம் கொண்டதாகும். மணிக்கு 61,200 கிலோமீட்டர் வேகத்தில் இந்த விண்கல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த விண்கல் பூமியைத் தாக்க சுமார் 2 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2 சதவீத தாக்கும் வாய்ப்பு உண்மையாகிவிட்டால், இந்த விண்கல் பூமியில் எங்காவது மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கல் மோதுவதால், பூமி அழிந்து விடாது என்றும், மனித குலத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

பூமியில் ஏதாவது ஒரு நாட்டில், ஏதாவது ஒரு முக்கிய நகரில் விழும் போது, மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர். இது எங்கு நடந்தாலும் சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கும் மேல் பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

பூமியைத் தாக்கும் இடத்தில் 10 கிலோமீட்டர் அகலத்துக்கு ஒரு பெரிய பள்ளத்தை உருவாக்கும். இந்த விண் கல் விழுந்த இடத்தை சுற்றி 10 ரிக்டர் அளவுக்கும் மேல் நிலநடுக்கம் ஏற்படும். ஒரு கட்டிடம் கூட மிஞ்சாது. இந்த தாக்கத்தால் ஏற்படும் பெரும் புகையானது வானத்தையே மறைக்கும். இதனால் சூரிய ஒளி கூட பூமிக்குள் வரமுடியாது. லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள். கோடிக்கணக்கானோர் படுகாயமடைவார்கள். பூமியின் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பூமியின் மீது விண்கல் மோதும்போது ஏற்படும் சக்தி, 8 மெகாடன் TNT அளவுக்கும் அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது ஜப்பானின் ஹிரோஷிமாவைத் தாக்கிய அணுகுண்டைப் போல 500 மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.

இவையெல்லாம் விண்கல்லின் அளவு, நகரும் வேகம் ஆகியவற்றைப் பொறுத்தது என்று கூறும் விஞ்ஞானிகள், பூமியிலிருந்து விண்கல்லின் தூரம் இன்னும் துல்லியமாக தெரியவில்லை என்கிறார்கள். விண்கல் பற்றிய கூடுதல் தரவுகளைச் சேகரித்து அதன் பாதையைச் செம்மைப்படுத்தும்போது, பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் குறையலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தென் அமெரிக்கா, தெற்காசியா, ஆப்பிரிக்கா, அரேபிய கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல், ஆகிய பகுதிகளை இந்த விண்கல் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எத்தியோப்பியா, சூடான், நைஜீரியா, வெனிசுலா, கொலம்பியா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளில் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த விண்கல் குறித்த கூடுதல் தரவுகளைச் சேகரித்து, அதன் பாதையைச் செம்மைப்படுத்தும்போது, ​​பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லாமலே போகலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எப்போதுமே பூமிக்கு நெருக்கமாக பல விண்கற்கள் இருக்கின்றன. அவை எல்லாமே பூமியைத் தாக்குவதில்லை. குறிப்பிட்ட சில விண்கற்கள் மட்டுமே ஆபத்தானவையாக வகைப் படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது 0 என்கிற அளவில் வைக்கப்பட்டிருக்கும் கற்கள் பூமியை தாக்குவதற்கு வாய்ப்பு எப்போதுமே கிடையாது. இதே 10 என்கிற அளவில் வைக்கப்பட்டிருக்கும் விண்கல் , நிச்சயம் பூமியை தாக்கும். இந்த அளவீட்டில் YR 4 எனும் விண்கல் 3வது இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

தற்சமயம் இந்த விண்கல் பூமியை விட்டு வேகமாக விலகி சென்றுக்கொண்டிருக்கிறது என்றும் மீண்டும் 2028ஆம் ஆண்டு பூமிக்கு நெருக்கமாக வரும் என்று கூறப்படுகிறது.

அதற்கு பிறகு 2032 ஆம் ஆண்டு, மீண்டும் பூமிக்கு அருகில் வரும்போதுதான் பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Tags: IndiaNASAjapanasteroids pose a threat to the Earth.YR 4 is likely to hit the Earth in 2032NASA scientistsHiroshima
ShareTweetSendShare
Previous Post

மின் இணைப்புக்கு ரூ.30,000 லஞ்சம் – உதவி பொறியாளர் கைது!

Next Post

மகாகும்ப மேளா : 51 கோடி பேர் புனித நீராடல்!

Related News

தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது : நயினார் நாகேந்திரன்

துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பதில்

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் அண்ணாமலை!

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

பாரத திரை இசை உலகின் தேசிய கீதம் இசைஞானி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து3!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர தின கொண்டாட்டம் – கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கிய மாணவர்கள்!

தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்ற தமிழிசையை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மேலூர் நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா கோலாகலம்!

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

சுதந்திர தினம் – தென்காசி ரயில், பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

கூலி திரைப்படம் ரிலீஸ் – திரையரங்கில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies