புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் ஞானேஷ்குமாரின் பின்னணி குறித்து பார்ப்போம்.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் 61 வயதான ஞானேஷ்குமார், கான்பூரில் உள்ள இந்திய பொறியியல் நிறுவனத்தில் சிவில் பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார்.
இந்திய பட்டய நிதி ஆய்வாளர்கள் நிறுவனத்தில் வணிக நிதி படிப்படையும், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழல் பொருளாதாரம் பயின்றுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்வது தொடர்பான மசோதாவை வரைவு செய்ததிலும், அயோத்தி கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்குகளில் ஆவணங்களை கையாண்டதிலும் முக்கிய பங்கு வகித்தவர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றிருக்கும் இவர், 1988ஆம் ஆண்டு கேரளா ஐஏஎஸ் பேட்ச்-ஐ சேர்ந்தவராவார். சமீபத்தில் உள்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளர் பதவியையும் வகித்துள்ளார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தில் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஞானேஷ்குமார், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.