விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் : அண்ணாமலை
Nov 5, 2025, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் : அண்ணாமலை

Web Desk by Web Desk
Feb 18, 2025, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தோல்வி அடைந்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில்

இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில்,

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் மார்ச் 1-ம் தேதியில் இருந்து 90 நாட்களுக்கு மும்மொழிக் கொள்கை குறித்து கருத்து கேட்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்றும் மும்மொழி தொடர்பாக கணக்கு எடுத்து குடியரசு தலைவருக்கு அறிக்கை கொடுக்க உள்ளோம் என  அண்ணாமலை தெரிவித்தார்.

தாய்மொழிக்கு முன்னுரிமை வழங்குவதே புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு என்றும் தமிழகத்தில் இந்தி எங்கேயும் திணிக்கப்படவில்லை; திணிக்கவும் மாட்டோம்  என  அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

3-வது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம்,  மும்மொழி கொள்கை என்றால் இந்தி திணிப்பு கிடையாது என தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து திமுகவினர் தவறான பிரச்சாரத்தை செய்வதாக அண்ணாமலை குற்றச்சாட்டினார்.

விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகரின் அறக்கட்டளை பெயரில் விஜய்யின் பள்ளி நடத்தப்படுவதாக அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 30 லட்சம் பேர் மும்மொழி கல்வியை படிக்கின்றனர் என்றும்  நான் கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று அரசு கூறுவது வெட்கக்கேடானது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

“அரசு பள்ளியை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிகம் இருப்பதால் இரு மொழிக்கொள்கை தோற்றுவிட்டது  என தெரிவித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஸின் மகன் தனியார் பள்ளியில் பிரெஞ்சு மொழி படிக்கிறார் என்றும் அன்பில் மகேஸ் குழந்தைக்கு ஒரு நியாயம், அரசு பள்ளி குழந்தைகளுக்கு ஒரு நியாயமா? என  அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

தனியார் பள்ளிகளுக்காக அரசு பள்ளிகளை  அழிக்கிறார்கள் என்றும்  மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக இரு மொழிக்கொள்கை என அண்ணாமலை தெரிவித்தார்.

விகடன் இணையதளத்தை முடக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் பிரதமர் கையில் விலங்கு போட்டு டிரம்ப் அருகில் அமர்வது போல சித்தரிப்பது கருத்து சுதந்திரமா?  என  அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

“முதல்வருக்கு விலங்கு போட்டு, பக்கத்தில் மதுக்கடை ஒன்றை வைத்து கார்ட்டூன் போட்டால் முதல்வர் விட்டு விடுவாரா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் யார் அந்த சார் என்ற விவகாரத்தில் 100% மா.சுப்பிரமணியன் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என அண்ணாமலை குற்றச்சாட்டினார். SIT விசாரணை முடியும்போது 100% ஆதாரங்களுடன் யார் அந்த சார் என்பதை வெளியிடுவேன் என அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: Thaveka leader Vijay runs a CBSE school named Vijay Vidyasram : AnnamalaiDMKbjp k annamalaitvk vijaynew education policy
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் : நவீன யுகத்தின் தெய்வீகக் குரு!

Next Post

குற்றவியல் சட்டம் : அமித் ஷா தலைமையில் ஆலோசனை!

Related News

வாக்குமூலத்தை பதிவு செய்ய கிரிக்கெட் வீரர் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை – நீதிபதிகள்

மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவு – நாளை மறுதினம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

கோவை : தனியார் உரக் கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!

எம்.எல்.ஏவை கிண்டல் செய்த எம்.பி கார்த்தி சிதம்பரம்!

கள்ளக்குறிச்சி : அவசர அவசரமாக புற்கள் மீது சிமெண்ட் சாலை – வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

AI பயன்படுத்தப்படுவதால் இயக்குநர்களின் நேர்த்தி குறைகிறது – செல்வராகவன்

இந்திய கடற்படை மீனவ சமுதாயத்திற்கு பாதுகாப்பாக உள்ளது – கடற்படை அதிகாரி சுவரத் மாகோன்

பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியா இன்று சொந்தக்காலில் தனித்து நிற்கிறது – நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies