விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் : அண்ணாமலை
Mar 15, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Feb 18, 2025, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தோல்வி அடைந்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில்

இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில்,

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் மார்ச் 1-ம் தேதியில் இருந்து 90 நாட்களுக்கு மும்மொழிக் கொள்கை குறித்து கருத்து கேட்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்றும் மும்மொழி தொடர்பாக கணக்கு எடுத்து குடியரசு தலைவருக்கு அறிக்கை கொடுக்க உள்ளோம் என  அண்ணாமலை தெரிவித்தார்.

தாய்மொழிக்கு முன்னுரிமை வழங்குவதே புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு என்றும் தமிழகத்தில் இந்தி எங்கேயும் திணிக்கப்படவில்லை; திணிக்கவும் மாட்டோம்  என  அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

3-வது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம்,  மும்மொழி கொள்கை என்றால் இந்தி திணிப்பு கிடையாது என தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து திமுகவினர் தவறான பிரச்சாரத்தை செய்வதாக அண்ணாமலை குற்றச்சாட்டினார்.

விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகரின் அறக்கட்டளை பெயரில் விஜய்யின் பள்ளி நடத்தப்படுவதாக அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 30 லட்சம் பேர் மும்மொழி கல்வியை படிக்கின்றனர் என்றும்  நான் கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று அரசு கூறுவது வெட்கக்கேடானது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

“அரசு பள்ளியை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிகம் இருப்பதால் இரு மொழிக்கொள்கை தோற்றுவிட்டது  என தெரிவித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஸின் மகன் தனியார் பள்ளியில் பிரெஞ்சு மொழி படிக்கிறார் என்றும் அன்பில் மகேஸ் குழந்தைக்கு ஒரு நியாயம், அரசு பள்ளி குழந்தைகளுக்கு ஒரு நியாயமா? என  அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

தனியார் பள்ளிகளுக்காக அரசு பள்ளிகளை  அழிக்கிறார்கள் என்றும்  மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக இரு மொழிக்கொள்கை என அண்ணாமலை தெரிவித்தார்.

விகடன் இணையதளத்தை முடக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் பிரதமர் கையில் விலங்கு போட்டு டிரம்ப் அருகில் அமர்வது போல சித்தரிப்பது கருத்து சுதந்திரமா?  என  அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

“முதல்வருக்கு விலங்கு போட்டு, பக்கத்தில் மதுக்கடை ஒன்றை வைத்து கார்ட்டூன் போட்டால் முதல்வர் விட்டு விடுவாரா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் யார் அந்த சார் என்ற விவகாரத்தில் 100% மா.சுப்பிரமணியன் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என அண்ணாமலை குற்றச்சாட்டினார். SIT விசாரணை முடியும்போது 100% ஆதாரங்களுடன் யார் அந்த சார் என்பதை வெளியிடுவேன் என அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: Thaveka leader Vijay runs a CBSE school named Vijay Vidyasram : AnnamalaiDMKbjp k annamalaitvk vijaynew education policy
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் : நவீன யுகத்தின் தெய்வீகக் குரு!

Next Post

குற்றவியல் சட்டம் : அமித் ஷா தலைமையில் ஆலோசனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies