கடற்கரையில் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி முடிவு!
Mar 19, 2026, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடற்கரையில் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி முடிவு!

Murugesan M by Murugesan M
Feb 27, 2025, 02:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் உள்ள 5 கடற்கரை பகுதிகளின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. ரிப்பன் மாளிகையில் மன்ற கூட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க 200 கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 50 பேர் மட்டும் வருகை தந்தால் கூட்டம் அரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால், ஆதங்கப்பட்ட துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு உறுப்பினர்கள் குறித்த நேரத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாமன்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் கடன் குறித்து பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, கடந்த ஜனவரி 1- ஆம் தேதி வரை சென்னை மாநகராட்சிக்கு 3 ஆயிரத்து 65 கோடி கடன் உள்ளதாக தெரிவித்தார்.

மொத்த கடனில் ஆயிரத்து 577 கோடி ரூபாய் கடன் திருப்பி செலுத்தப்பட்டதாகவும், மீதமுள்ள தொகைக்கு மாதந்தோறும் வட்டி செலுத்தி வருவதாக கூறினார். மேலும், ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை அசல் செலுத்தி வருவதாகவும் மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை மணலியில் மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் வெடித்து சிதறியதில் ஆப்ரேட்டர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் தீர்த்தி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஆணையர் குமரகுருபரன், சென்னை மணலியில் பயோ கியாஸ் விபத்து குறித்து தணிக்கை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சென்னையில் இயங்கி வரும் பெரும்பான்மையான இயற்கை உரம் தயாரிக்கும் கூடங்களை மூட முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. 15 மண்டங்களில் இயங்கி வரும் 190 இயற்கை உரம் தயாரிக்கும் கூடங்களில் 168 கூடங்களை மூட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் இயங்கி வரும் இயற்கை உரம் தயாரிக்கும் கூடங்களை மூடவுள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா நகர் பகுதிகளில் உள்ள முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சாலைகளில் பார்க்கிங் நிர்வாகத்தை மேற்கொள்ள மாநகராட்சி கூட்டத்தில் முன்மொழியப்பட்டது. அதன்படி, ஒரு மணி நேரத்திற்கு மேல் இருசக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 40 ரூபாய் கட்டணம் வசூல் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், இலகு ரக மற்றும் கனரக வாகனங்களுக்கு 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள வணிக வளாக கடைகளுக்கான மாத வாடகை மாதம்தோறும் 5ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால் 12 சதவீதம் அபராதம் விதிக்க மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், அனைத்து வணிக வளாக கடைகளின் வாடகையும் ஆண்டுதோறும் 15 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், 5 சதவீதமாக குறைத்து மாமன்ற கூட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது.

சென்னையில் மழைநீர் வடிகால்களில் நவீன இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணியை மேற்கொள்ள மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு வட்டார அலுவலகத்திற்கும் 10 கோடி ரூபாய் செலவில் நவீன இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணியினை மேற்கொள்ளவும், இப்பணிகளுக்கு ஒப்பந்தபுள்ளிகள் கோரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள 5 கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மெரினா கடற்கரையை ஒரு வருடத்திற்கு தூய்மை பணி மேற்கொள்ள 7 கோடியே 9 லட்சம் ரூபாய் தோராயமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர், புது கடற்கரை ஆகிய 4 கடற்கரைகளிலும் ஒரு வருட தூய்மை பணி மேற்கொள்ள 4 கோடியே 54 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் தோராய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags: Chennai Corporation Mayor5 The Chennai Corporation decided to give the cleaning work on the beach to the private sector!CGCசென்னை மாநகராட்சி
ShareTweetSendShare
Previous Post

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை கும்பமேளா மூலம் ஒரே இடத்தில் சங்கமித்தது : பிரதமர் மோடி

Next Post

உச்சநீதிமன்றத்தில் மனு : சீமான் முடிவு!

Related News

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies