நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணையில் வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், 12 வாரத்திற்குள் போலீசார் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் தங்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை உயர்நீதிமன்றம் முறையாக கருத்தில் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், 12 வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கும் இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.