புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தலை துண்டிக்கப்பட்டு மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்தக்காடு கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், கொலை செய்யப்பட்டது பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த சத்திய நாராயணன் என்பதை உறுதி செய்தனர்.
காணாமல் போன தலையை தீவிரமாக தேடி வரும் போலீசார், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.