மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 57 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
மும்பையில் பைகுல்லா பகுதியில் 57 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு கட்டடத்தின் 42-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீயினால் அங்கு புகை சூழ்ந்ததால் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். இதனையடுத்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.