சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போலீசருடன் வீரப்பன் மகள் வித்யாராணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேற்று இரவு சீமான் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டன்ர். அவர்களை போலீசார் அனுமதிக்க மறுத்தனர். இதனால் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் நிலையம் அருகே தங்களை அனுமதிக்கும்படியும் கூறி, கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில் வீரப்பனின் மகள் வித்யாராணி காவல் நிலையம் செல்ல அனுமதிக்கக்கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டடார். சீமானை ஒழிக்க பார்க்கிறீர்களா என கண்ணீருடன் அவர் கேள்வி எழுப்பினார்.