ராமேஸ்வரம் மீனவர்களின் காத்திருப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இப்பிரச்னைக்கு தீர்வு காணாத அரசைக் கண்டித்தும் ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவ பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்தனர். இந்த நிலையில், மீனவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன், அன்வர் ராஜா உள்ளிட்டோரும், வைகை விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.எஸ்.கே பாக்கியநாதன் தலைமையிலான விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.