திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர்.
இதுமட்டுமின்றி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களும் திருவண்ணாமலை வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.