கேரளாவில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டினார்.
மேலும் போதைப் பொருள்களை ஒழிக்க மத்திய அரசுடன் இணைந்து கேரளா அரசு செயல்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் போதை பொருள்களுக்கு எதிராக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சசிதரூர் வலியுறுத்தினார்.