நாட்டின் நகர்ப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பு, கடந்த 6 ஆண்டுகளில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது கடந்த 25 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மாற்றம் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், கல்வியில் பாலின சமத்துவம், தாமதமான திருமணங்கள் போன்ற சமூக மாற்றங்களால் இது சாத்தியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.