பெண்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் : QR கோடு ஒட்டும் திட்டம்!
Oct 2, 2025, 01:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் : QR கோடு ஒட்டும் திட்டம்!

Web Desk by Web Desk
Mar 10, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மீண்டும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய திட்டம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கக்கூடிய மக்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இரவு நேரத்தில் சென்னைக்கு திரும்புவோர், போதிய பேருந்துகள் இல்லாத பட்சத்தில் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

அப்படியான பயணம் சில நேரங்களில் மிகுந்த ஆபத்துமிக்க பயணமாக அமைந்துவிடுகிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அரங்கேறவும் அப்பயணங்கள் பெரும் காரணங்களாக உள்ளன.

இரவு நேரங்களில் ரேபிடோ, ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் நோக்கத்தில் க்யூ ஆர் கோடு பொருத்தும் திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

க்யூ ஆர் கோடு ஒட்டப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் பயணிகள், அசாதாரண சூழலை உணர்ந்தால், தங்களுடைய செல்போனில் அந்த க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்து SOS பட்டனை அழுத்தினால், குறிப்பிட்ட வாகனத்தின் அனைத்து விவரங்களும் காவல்துறையின் கவனத்திற்கு சென்றுவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் பயணிக்கவே அச்சப்படும் சூழலில், சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் க்யூ ஆர் கோடு திட்டம் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக கூறி பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் தொடங்கி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், பொதுப்போக்குவரத்து என அனைத்துவிதமான இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த க்யூ ஆர் கோடு திட்டம் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Tags: QR கோடு ஒட்டும் திட்டம்CHENNAI NEWSwomen safetychennai news todayNew technology to protect women: QR code sticking project!
ShareTweetSendShare
Previous Post

லெப்டினன்ட் அதிகாரிகள் பதவியேற்பு : நாட்டின் பாதுகாப்பு அரண்!

Next Post

உக்ரைனை பாதுகாக்க அமைதிப்படை : பிரிட்டன் தலைமையில் அணிதிரண்ட ஐரோப்பா!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies