புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோயில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
இளஞ்சாவூர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற பந்தையத்தில் 20 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
பெரிய மாடுகளுக்கு 8 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 6 மைல் தூரமும் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டது. காளைகள் ஒன்றை ஒன்று முந்தி இலக்கை நோக்கி ஓடியதைச் சாலையில் இருபுறங்களில் நின்று ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.