மேகதாது திட்டத்தைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகக் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேகதாதுவில் அணைக் கட்டினால் கர்நாடகாவை விட, தமிழகத்திற்குத் தான் அதிக நன்மை எனக் கூறினார்.
வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை மேகதாதுவில் அணைக் கட்டினால் சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மேகதாது திட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொண்டார்.