மக்களவைத் தேர்தலின் போது வெளிநாட்டுப் பணத்தை இண்டி கூட்டணி பயன்படுத்தியதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்பை மாற்றிவிடுவார் எனப் பொய்யான பரப்புரையைக் காங்கிரஸ் கட்சி மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டினார்.