டெல்லியில் 10 லட்சம் ரூபாய் கேட்டு 9-ம் வகுப்பு மாணவனை, அவனது நண்பர்களே கடத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிலன் விஹார் பகுதியைச் சேர்ந்த 15வயது சிறுவன் வைபவ் கார்க்னை அவனது நண்பர்கள் கடத்தி, 10 லட்சம் ரூபாய் கேட்டு அவனது தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அங்குள்ள ஏரி பகுதியில் அவனது உடலைக் கண்டெடுத்த போலீசார், வைபவ்-ன் நண்பர்கள் மூவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .