திருப்பதியில் 3 மாதங்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன்படி ஏப்ரல்1-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை 3 மாதங்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
பரிந்துரை கடிதங்களின் எண்ணிக்கையைக் குறைத்து சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாகத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.