உதகையில் கோடை சீசனை குறிவைத்து கொள்ளை லாபம் - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உதகையில் கோடை சீசனை குறிவைத்து கொள்ளை லாபம் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Apr 2, 2025, 06:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதகையில் கோடை சீசன் தொடங்கியிருக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளின் கட்டணமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வரும் உதகையில் முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இயற்கை எழில் நிறைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கமாக இருக்கிறது. கோடைக் காலத்திலும் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கத் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நீலகிரியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சுற்றுப்பயணிகளின் வருகையைப் பயன்படுத்தி அங்குள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல் அறைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியோடு முதல் சீசன், இரண்டாம் சீசன், மூன்றாம் சீசன் என மூன்று வகையான கட்டண உயர்வு நடைமுறையில் இருக்கும் நிலையில், தற்போது அந்த நடைமுறைக்கு எதிராக உதகையில் உள்ள பெரும்பாலான காட்டேஜ்கள் வாடகை கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருப்பது சுற்றுலாப்பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த மாதம் 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட தங்கும் விடுதிகளுக்கான கட்டணம்  எந்தவித முன்னறிவிப்புமின்றி தற்போது பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே உதகையில் அமலில் இருக்கும் இ பாஸ் நடைமுறையால் சிறு, குறு வியாபாரிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் விடுதிகள் கட்டணத்தால் சுற்றுலாப்பயணிகள் எந்த வித பொருட்களையும் வாங்காமல் சென்றுவிடுவதும் அவர்களுக்குக் கூடுதல் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், ஹோட்டல்கள் மற்றும் காட்டேஜ்களில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்தினால் மட்டுமே உதகைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை உயர்வதோடு, சுற்றுலாத் தொழிலையே நம்பியிருக்கும் வணிகர்களின் வாழ்வாதாரமும் சிறக்கும்.

Tags: ootyUthakai: Looting profits targeting the summer season!கோடை சீசன்உதகையில் கோடை சீசன்
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் – பாஜக எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies