உதகையில் கோடை சீசனை குறிவைத்து கொள்ளை லாபம் - சிறப்பு தொகுப்பு!
Jun 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உதகையில் கோடை சீசனை குறிவைத்து கொள்ளை லாபம் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Apr 2, 2025, 06:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதகையில் கோடை சீசன் தொடங்கியிருக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளின் கட்டணமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வரும் உதகையில் முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இயற்கை எழில் நிறைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கமாக இருக்கிறது. கோடைக் காலத்திலும் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கத் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நீலகிரியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சுற்றுப்பயணிகளின் வருகையைப் பயன்படுத்தி அங்குள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல் அறைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியோடு முதல் சீசன், இரண்டாம் சீசன், மூன்றாம் சீசன் என மூன்று வகையான கட்டண உயர்வு நடைமுறையில் இருக்கும் நிலையில், தற்போது அந்த நடைமுறைக்கு எதிராக உதகையில் உள்ள பெரும்பாலான காட்டேஜ்கள் வாடகை கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருப்பது சுற்றுலாப்பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த மாதம் 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட தங்கும் விடுதிகளுக்கான கட்டணம்  எந்தவித முன்னறிவிப்புமின்றி தற்போது பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே உதகையில் அமலில் இருக்கும் இ பாஸ் நடைமுறையால் சிறு, குறு வியாபாரிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் விடுதிகள் கட்டணத்தால் சுற்றுலாப்பயணிகள் எந்த வித பொருட்களையும் வாங்காமல் சென்றுவிடுவதும் அவர்களுக்குக் கூடுதல் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், ஹோட்டல்கள் மற்றும் காட்டேஜ்களில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்தினால் மட்டுமே உதகைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை உயர்வதோடு, சுற்றுலாத் தொழிலையே நம்பியிருக்கும் வணிகர்களின் வாழ்வாதாரமும் சிறக்கும்.

Tags: ootyUthakai: Looting profits targeting the summer season!கோடை சீசன்உதகையில் கோடை சீசன்
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் – பாஜக எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies