பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்காக உலக நாடுகள் இந்தியாவை எதிர்நோக்கி இருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ‘சிவதாண்டவ ஸ்தோத்திர’ நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அனைவரிடமும் தெய்வீகத்தை காண வேண்டும் என்பதே நமது கலாச்சாரம் என்று அவர் குறிப்பிட்டார்.
நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே நன்மை பயப்பதாகவும் அவர் கூறினார். உலகை கட்டியெழுப்ப அவை மிகப் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறிய மோகன் பகவத், நமது வேதங்களை மறுகட்டமைப்பது அவசியம் என்றும் சுட்டிக் காட்டினார்.
















