வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்கள் : ஓராண்டாகியும் நிவாரணம் வழங்காவில்லை என குற்றச்சாட்டு!
Jul 25, 2025, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்கள் : ஓராண்டாகியும் நிவாரணம் வழங்காவில்லை என குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 10, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட பெருமழையில் வீடுகளை இழந்த தவிக்கும் தங்களுக்கு ஓராண்டைக் கடந்தும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மிக அதிக கன மழை பெய்தது. இதன் காரணமாகத் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இந்த வெள்ளப்பெருக்கால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மேலும் வெள்ள நீர் சூழ்ந்து, பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம்  ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதமானது. இதனால் வீடுகளை இழந்து மக்கள் பரிதவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கனமழையால் 50 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்ததாக அதிகாரிகள் கணக்கீடு செய்தனர். மேலும் தமிழக அரசு சார்பாகச் சேதமடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அதிகாரிகள்  மக்களிடம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து  ஸ்ரீ வைகுண்டம் பேரூராட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்கள் வீடு கட்டுவதற்காக ஆணை வழங்கி, முதல் தவணையாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கியுள்ளது.

அதன் பிறகு ஒவ்வொரு கட்ட கட்டுமான பணிக்கும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை நம்பி பாதி, சேதமடைந்த வீடுகளை மக்கள் முழுமையாக இடித்துள்ளனர்.

சிலர் கட்டுமான பணிகளை ஆரம்பித்துப் பாதி கட்டிட வேலையை முடித்துள்ளனர். ஆனால் ஓராண்டைக் கடந்தும் இதுவரை தமிழக அரசு மீதத் தொகையான 4 லட்ச ரூபாயை வழங்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்கவில்லை எனில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க உள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிவாரண தொகையை நம்பி ஓராண்டுக்கும் மேலாக வீடுகளை இழந்து தவித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: tamil janamதூத்துக்குடி மாவட்டம்People who lost their homes in the floods: Allegation that no relief has been provided even after a year!
ShareTweetSendShare
Previous Post

மகாவீர் ஜெயந்தி தினத்திலும் மதுபான விற்பனை படுஜோர்!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மேட்டூர் அணையில் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies