பாஜகவினரின் செல்போன் உரையாடல்களை ஒடடுக்கேட்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவினரின் செல்போன் உரையாடல்களை ஒடடுக்கேட்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 20, 2025, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜகவினரின் செல்போன் உரையாடல்களை திமுக அரசு ஒட்டுக் கேட்பதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேர்தல் கூட்டணி, தொகுதி ஒதுக்கீட்டை பாஜக தலைமை முடிவு செய்யும் என தெரிவித்தார்.

பாஜகவினரின் செல்போன் உரையாடல்களை திமுக அரசு ஒட்டுக் கேட்பதாக குற்றம் சாட்டிய அவர், மாநில தலைவராக தனது பொறுப்பு பாஜக தொண்டர்களை பாதுகாப்பது என்றும் தெளிவுபடுத்தினார்.

பூத் கமிட்டியை சரி செய்தால் பாஜகவை வெல்ல யாராலும் முடியாது எனக்கூறிய அவர், இரட்டை இலையுடன் சேர்ந்து இரட்டை இலக்கத்தோடு சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுக தொண்டர்களுடன் பாஜகவினர் ஒன்றாக பயணிக்க வேண்டும் எனவும் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தினார்.

இதனிடையே கோயம்புத்தூர் அருகே சோமனூரில் கூலி உயர்வு மற்றும் உழைப்புக்கேற்ற ஊதிய கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் வலியுறுத்தி கடந்த சில தினங்களாக போராடி வரும் விசைத்தறி நெசவாளப் பெருமக்களை நேரில்  சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்து தங்களது உடலை வருத்திக் கொள்ள வேண்டாமென கேட்டுக் கொண்டதோடு, கூட்டத்தில் உரையாடுகையில், சட்டமன்றத்தில் இதைப் பற்றி பேசி தமிழக முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் எல்.முருகன் , கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி,  மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்ததம்,  கோவை பெருங்கோட்ட மாவட்டத் தலைவர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழி நெடுகிலும் பூக்களை தூவியும், மேள தாளம் முழங்க அவரை வரவேற்ற பாஜகவினர், சாரட் வண்டியில் நயினார் நாகேந்திரனை அழைத்து வந்தனர்.

 

Tags: bjp leaders cellphone tappingcoimbatoreDMK governmentadmk bjp allianceBJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ த்ரில் வெற்றி!

Next Post

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் பலி – இபிஎஸ் கண்டனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies