ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலை கடந்த 2018 ஆம் ஆண்டு மூடப்பட்டது. இந்த தொழிற்சாலையை மீண்டும் திறக்கக்கோரி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தொழிற்சாலை மூடப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.