ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் - தலைவர்கள் கண்டனம்!
Aug 15, 2025, 12:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – தலைவர்கள் கண்டனம்!

Web Desk by Web Desk
Apr 23, 2025, 06:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல் எனவும் தாக்குதல் நடத்தியது மன்னிக்க முடியாதது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டுள்ளது எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள பதிவில், தாக்குதலை நடத்தியவர்கள் விலங்குகள் என விமர்சித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார். குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், பாதுகாப்பு குறைபாடுகளை ஆராயவும் முழுமையான விசாரணை தேவை எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், நமது நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை எனவும் மக்களுக்கு எதிரான இத்தகைய இழிவான செயல்கள் கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவிப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்….

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை மன்னிக்க முடியாது எனவும் குற்றத்தின் பின்னணியில் உள்ளவர்கள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முழு தேசமும் ஒரே குரலில் ஒன்றுபட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

Tags: epsJammu and KashmirJammu Kashmir terrorists attackresident Draupadi Murmu condemnednaynar nagerndranrahul gandhi
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – பிரதமர் மோடி கண்டனம்!

Next Post

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி – அவசரமாக நாடு திரும்பும் பிரதமர்!

Related News

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies