புதுச்சேரி செட்டிகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
செட்டிகுளம் பகுதியில் உள்ள 20 குடும்பத்தினர், சாலையை ஆக்கிரமித்துக் குடியிருப்புகளைக் கட்டி வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டனர்.
அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்பு வாசிகள், கையில் சிலிண்டர்களை வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.
மேலும், ஜேசிபி இயந்திரம் முன்பு நின்று போராட்டம் நடத்த முயன்ற குடியிருப்பு வாசிகளை, காவல் துறையினர் கைது செய்தனர்.