பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தான் இந்தியாவுடனும், பாகிஸ்தானுடனும் மிக நெருக்கமாக இருப்பதாகவும், எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றங்கள் நீண்ட காலமாக தொடர்வதாகவும் கூறியுள்ளார்.
இரு தரப்பினரும் இந்தப் பிரச்சினையை எப்படியாவது தீர்த்துக் கொள்வார்கள் என குறிப்பிட்ட டிரம்ப், எல்லையில் கூடிய விரைவில் பதட்டம் தணியும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.