தர்பூசணி பழத்தில் ரசாயனம் கலப்பதாக வதந்தி பரவிய நிலையில், விவசாயி வழங்கிய பழத்தைச் சாப்பிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயி ஒருவர் தர்பூசணி பழத்தில் ரசாயனம் கலப்பதாக வதந்தி பரவியதால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதாக வேதனையுடன் கூறினார்.
தொடர்ந்து அவரது கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், தர்பூசணி பழத்தை உண்டு மகிழ்ந்தார்.