இந்தியாவிற்கு முழு ஆதரவையும் தொடர்ந்து வழங்குவோம் என அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு இயக்குநர் காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் அமெரிக்க தொடர்ந்து வழங்கும் என்றும், பயங்கரவாதத்தின் தீமைகளால் உலகம் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை பஹல்காம் தாக்குதல் சம்பம் நினைவூட்டுகிறது எனவும் கூறியுள்ளார்.
மேலும், பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகவும் காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.