பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மிக மோசமான ஒன்று என அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இந்தியா – பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சனை பல ஆண்டுகளைக் கடந்து நடந்து வருவதாகவும், அதனால் அப்பகுதியில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தான் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு மிகவும் நெருக்கமானவன் என குறிப்பிட்ட அதிபர் டிரம்ப், இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான பிரச்சனையை எப்படியாவது சரிசெய்வார்கள் என நம்புவதாகவும் கூறினார்.