தமிழகம் அமைதிப்பூங்கா என்ற சூழலில் இருந்து மாறுகிறதோ? : வானதி சீனிவாசன் வேதனை!
Aug 18, 2025, 01:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகம் அமைதிப்பூங்கா என்ற சூழலில் இருந்து மாறுகிறதோ? : வானதி சீனிவாசன் வேதனை!

Web Desk by Web Desk
Apr 28, 2025, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாள்தோறும் வெளியாகும் குற்றச் செய்திகளைப் பார்க்கும்போது தமிழகம் அமைதிப்பூங்கா என்ற சூழலில் இருந்து மாறுகிறதோ என்ற அச்சம் ஏற்படுவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.

நாள்தோறும் வெளியாகும் குற்றச் செய்திகளைப் பார்க்கும்போது தமிழகம் அமைதிப்பூங்கா என்ற சூழலில் இருந்து மாறுகிறதோ என்ற அச்சம் ஏற்படுவதாகக் கூறினார். மேலும், தமக்குக் கொடுப்பது போலவே தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்மணிக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, தங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்தார்.

இதனை அடுத்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், எல்லா இடங்களிலும் வசிக்கும் மொத்த பேரும் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள் என்றும், சில கெட்டவர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், ராமாயணத்திலேயே ஒருவர் பெண்ணை தூக்கிச் சென்றதாகச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

பின்னர் பேசிய வானதி சீனிவாசன், கோவைக் குண்டு வெடிப்பில்,  பயங்கரவாதத்திற்கு எதிரான நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் நிலைபற்றிய அறிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

திருப்பூரில் அதிகளவில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வசிப்பதால், அங்குக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்தார்.

Tags: Tamil Nadu is changing from a peaceful place: Vanathi Srinivasan is in painவானதி சீனிவாசன் வேதனை
ShareTweetSendShare
Previous Post

குடும்பத்தை இங்கிலாந்துக்கு நாடு கடத்திய பாகிஸ்தான் ராணுவ தளபதி!

Next Post

ஒரு வருடத்திற்கு இலவசப் பயணமா? : ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு GOOD NEWS!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies