மாறியது மனம் : தேசிய நீரோட்டத்தில் இணைந்த காஷ்மீர் மக்கள்!
Jul 23, 2025, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மாறியது மனம் : தேசிய நீரோட்டத்தில் இணைந்த காஷ்மீர் மக்கள்!

Web Desk by Web Desk
Apr 29, 2025, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீரில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை முன்னெடுத்ததுடன், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களில் கண்ணீர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். இதன்மூலம் காஷ்மீர் பாரதத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை இம்மக்களின் செயல்பாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பைப் பார்ப்போம்.

காஷ்மீரில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தேசத்தின் பக்கமும், மத்திய அரசின் பக்கமும் நிற்கிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்த குரல். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற வேதனையில் பேசும் இவர் சுற்றுலாவை நம்பியிருக்கும் காஷ்மீரி அல்ல…. ஒரு அரசு ஊழியர். இந்தியர்களை நாங்கள் என்றுமே நேசிக்கிறோம். ஆனால், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டு மிருகத்தனமான செயல்களைச் செய்தவர்களுக்கு மதம் என்பதே கிடையாது என்பது தான் அவரின் கண்ணீர் குரல்..

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அமலிலிருந்த கால கட்டத்தில் இதே மக்களைத் தான் தங்களுக்கான பாதுகாப்பு கேடயமாக மாற்றி வைத்திருந்தார்கள் தீவிரவாதிகள். அப்போதெல்லாம், தீவிரவாதிகளை வேட்டையாடச் சென்ற பாதுகாப்புப் படையினருக்கு எதிராகக் கல்வீசித் தாக்குதல் நடத்திய அப்பாவி மக்கள் தான், இன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்காக வீதிக்கு வீதி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காஷ்மீர் மக்களின் மனநிலையில் இந்த மாற்றம் ஏற்படுவதற்கான காரணம், அந்த மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தான் என்று நம்புகின்றனர் நடுநிலையான அரசியல் பார்வையாளர்கள்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு சட்டப்பிரிவு 370 என்ற காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய போது விமர்சித்தவர்கள் கூட, இன்று அப்பாவி சுற்றுலாப் பயணிகளுக்காகக் கண்ணீர் சிந்தும் காஷ்மீர் மக்களைக் கண்டு மவுனமாகி இருக்கின்றனர்.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் உயர்வு பெற்றது. தீவிரவாதிகள் நடமாட்டத்தை முற்றிலுமாக மத்திய அரசு கட்டுப்படுத்தியதால், அதுவரை வாழ்வாதாரமின்றி தவித்த காஷ்மீர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் வருகையால் பொருளாதார ரீதியாக மீண்டெழுந்தனர்.

இதன் காரணமாகத் தேசிய நீரோட்டத்தில் இணைந்த காஷ்மீர் மக்களை மீண்டும் தங்கள் வசம் இழுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்றுள்ளனர் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள்.

ஆனால், அது ஒருபோதும் நடக்காது என்று தங்கள் கண்டன நடவடிக்கைகளால் பதிலடி கொடுத்திருக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். நாங்கள் பயங்கரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்ற குரலுடன், அவர்கள் நடத்திய கண்டனப் பேரணிகளே இதற்குச் சாட்சி.

இது ஒருபுறம் என்றால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்காக, காஷ்மீரில் உள்ள ஆயிரத்து 290 கிராமங்களில் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி வயதில் மூத்தவர்கள் அவரை அனைவரும் ஒன்று திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி, உயிரிழந்தவர்களுக்காகப் பிரார்த்தனையும் நிகழ்த்தினர்.

எந்த தீமைக்கு உள்ளும் ஒரு நன்மை உண்டு என்ற வரிகளை நியாயப்படுத்துவது போல், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய பாதிப்பாக அமைந்திருந்தாலும், அதன் பிறகு காஷ்மீர் மக்களிடையே பயங்கரவாதத்திற்கு எதிரான தன்னெழுச்சி, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  இதன்மூலம் காஷ்மீர் பாரதத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை இம்மக்களின் செயல்பாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதே உண்மை.

பஹல்காம் தாக்குதல் நடந்த நாளன்று கூட, காயமடைந்தவர்களைத் தூக்கிக் கொண்டு ஓடி அவர்களின் உயிரைக் காக்க உறுதுணையாக இருந்தது காஷ்மீரில் சுற்றுலாவை நம்பியிருக்கும் மக்கள் தான். அந்த விதத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான கண்டனத்தைப் பதிவு செய்த காஷ்மீர் மக்கள், இன்று இந்திய மக்களின் பக்கமும், மத்திய அரசிற்குத் துணையாகவும் எழுச்சியுடன் நிற்கின்றனர். இனி வரும் நாட்களில் காஷ்மீரில் பயங்கரவாதம் ஊடுருவ முடியாமல் தடுக்கப் போகும் இரும்புத் திரையும் காஷ்மீர் மக்களே..!

Tags: jammu kashmirபஹல்காம் தாக்குதல்Change of heart: Kashmiri people have joined the national movementகாஷ்மீர் மக்கள்கண்டனப் பேரணி
ShareTweetSendShare
Previous Post

தாம்பரம் மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Next Post

பும்ராவின் மனைவி சஞ்சனா ஆதங்கம்!

Related News

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

Load More

அண்மைச் செய்திகள்

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies