கரூரில் மூத்த வழக்கறிஞரைக் கத்தியால் குத்திவிட்டு 6 லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கச் செயின்களை கொள்ளையடித்த ஜூனியர் வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது வீட்டிற்குள் மாஸ்க் அணிந்த படி புகுந்த 3 மர்ம நபர்கள் பணம் மற்றம் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்திய போலீசார், குற்றச்செயலில் ஈடுபட்ட ஜூனியர் வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை கைது செய்தனர்.