பிரதமர் மோடியின் சூப்பர் முடிவு : ஜாதிவாரி கணக்கெடுப்பு உண்மையான சமூக நீதி!
Sep 30, 2025, 05:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியின் சூப்பர் முடிவு : ஜாதிவாரி கணக்கெடுப்பு உண்மையான சமூக நீதி!

Web Desk by Web Desk
May 4, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் பிரதமர் மோடி, இன்னொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்திருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. தனது அரசு இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என்ற எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டை இந்த ஒற்றை முடிவால் தகர்த்துள்ளார் பிரதமர் மோடி. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நாட்டில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு, பல்வேறு தரப்பினரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. நாடு தழுவிய அளவில் இது ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையாகவும் இருந்து வருகிறது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை ஒரு போதும் நடத்தாது கூறிவந்தன.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில்  நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,  தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை, பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக்  கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி, லோக் ஜன சக்தி கட்சி (ராம் விலாஸ்), அப்னா தளம், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சி  உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும்  வரவேற்றுள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மட்டும் இல்லாமல்,  INDI இண்டி கூட்டணிக் கட்சிகளும் வரவேற்றுள்ளன.  1881ம் ஆண்டு முதல் 1931ம் ஆண்டு வரையிலான ஆங்கிலேயர் ஆட்சியில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி குறித்த தரவுகளும் சேகரிக்கப்பட்டன.

சுதந்திர இந்தியாவில் 1951ம் ஆண்டில்  எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், (ST) பட்டியலின பழங்குடியினர், (SC) பட்டியல் சாதியினர், (OBC) பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் பொதுப் பிரிவினர்  என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில்தான் தேசிய அளவில் அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிலையங்களில்   இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1980ம் ஆண்டு மண்டல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், இட ஒதுக்கீட்டுக்கு 1931 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு தரவுகளே பயன்படுத்தப்பட்டது.

2011ம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை. கிட்டத்தட்ட 93 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் முதல்முறையாகச் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடத்தப்படும் முதல் சாதிவாரியான கணக்கெடுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், காங்கிரஸ் கட்சியும், இண்டி கூட்டணிக் கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை ஓர் அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தி உள்ளன என்றும் விமர்சித்தார்.

மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அரசியல் காரணங்களுக்காகச் சாதி கணக்கெடுப்புகளைச் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்க இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கணக்கெடுப்பு எப்பொது நடைபெறும் என்பது பற்றி தற்போது எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதே, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு சேர்க்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது, பிரதமர் மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் செயல் திட்டம் என்று கூறப்படுகிறது

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மத்திய அரசின் இந்த முடிவு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆட்டத்தை மொத்தமாக காலி செய்திருக்கிறது.  உண்மையான வெளிப்படையான தன்மையுடன் இட ஒதுக்கீட்டின் அளவைத் தீர்மானிப்பதற்குச் சாதி கணக்கெடுப்பு காலத்தின் தேவை என்று கூறியுள்ள அரசியல் வல்லுநர்கள், உண்மையான சமூக நீதியை வலுப்படுத்துவதற்கும் அனைவருக்கும் சமமான எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும், பிரதமர் மோடி எடுத்துள்ள துணிச்சலான முடிவு  இது என்று பாராட்டியுள்ளனர்.

ஏற்கெனவே, மத்திய அரசு, சமூகத்தின் எந்தப் பிரிவினருக்கும் மனவருத்தம் ஏற்படுத்தாமல்,   பொருளாதார ரீதியாகப் பலவீனமான பிரிவினருக்கு 10 சதவீத  இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modiபிரதமர் மோடிPrime Minister Modi's super decision: Caste-wise census - true social justiceஜாதிவாரி கணக்கெடுப்புசமூக நீதி
ShareTweetSendShare
Previous Post

நாளை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு!

Next Post

ராஜஸ்தான் சர்வதேச எல்லை வழியாக ஊடுருவ முயற்சி – பாகிஸ்தான் ரேஞ்சர் கைது!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies