பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிந்து பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பஹல்காமில் அப்பாவி மக்களை கொன்றதால் போரில் தாங்கள் வென்றுவிட்டதாக தீவிரவாதிகள் எண்ண வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என கூறிய அமித் ஷா, அதனை அடியோடு ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார். பஹல்காமில் தாக்குதல் நடத்திய ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் தகுந்த பதிலடியை பிரதமர் மோடி கொடுப்பார் என்றும் அமித் ஷா சூளுரைத்துள்ளார்.