கோவை அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில்
வாழை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள.. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதில், காய்கள் அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால், பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.