திண்டிவனம் அருகே சாலை வசதி இல்லாததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கட்டிலில் சுமந்து சென்ற வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஏப்பாக்கம் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் மேட்டு காலனியைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் சாலை வசதி இல்லாததால், நடராஜனை அவரது உறவினர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குக் கயிற்றுக் கட்டிலில் தூக்கிச் சென்றனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அப்பகுதியில் சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.