நீட் தேர்வு - வழிகாட்டுதல்கள் வெளியீடு!
Jun 23, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

நீட் தேர்வு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Murugesan M by Murugesan M
May 3, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களைத் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் தேர்வர்கள் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்களைத் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்வு நாளன்று, தேர்வர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தேர்வு நேர அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என்றும், சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு வருவது அவசியம் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆண் தேர்வர்கள் பாதுகாப்பு மற்றும் சோதனை நடைமுறைகளுக்கு ஏற்ப எளிமையான, வசதியான ஆடைகளை அணிய வேண்டும் என்றும், தேவையற்ற தாமதங்கள், தகுதியிழப்புக்கு வழிவகுக்கும் ஆடை மற்றும் ஆபரணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆண் தேர்வர்கள், வெளிர் நிற அரைக்கை சட்டைகள், எளிமையான கால் சட்டைகள், மெல்லிய காலணிகளை அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பெண் தேர்வர்கள் ஆபரணங்கள் மற்றும் அலங்காரங்கள் இல்லாமல்  எளிய ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விரிவான வடிவமைப்புகள் இல்லாத வெளிர் நிற அரைக்கை குர்திகள், சல்வார் அல்லது பேண்ட்டுகள், செருப்புகள் அல்லது குறைந்த உயரம் கொண்ட ஹீல்ஸ் செருப்புகளை அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி வடிவம் கொண்டவை, ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பரமான ஆபரணங்கள், நகைகள், அதிக உயரம் கொண்ட ஹீல்ஸ்கள், ஷூக்கள், மூடிய நிலையில் வடிவமைக்கப்பட்ட காலணிகளை அணிந்து வர கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையத்திற்குத் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு நகல், வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்கு ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாள அட்டை, பால்பாயிண்ட் பேனா எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள், கால்குலேட்டர்கள், ப்ளூடூத் சாதனங்கள், பணப்பைகள், கைப்பைகள், சன் கிளாஸ்கள், அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட குறிப்புகள், துண்டு சீட்டுகள், சாப்பிடக்கூடிய பொருட்களை எடுத்துவரக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வர்கள் சரிபார்ப்பு, சோதனை நடைமுறைகளை முடிக்க ஏதுவாக முற்பகல் 11 மணிக்குள் தேர்வு மையத்தை அடைய வேண்டும் என்றும், மதியம் 1.30 மணிக்குப் பின்னர் தேர்வு மையம் உள்ளே அனுமதி இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: NEET Exam - Guidelines Releasedநீட் தேர்வு - வழிகாட்டுதல்கள் வெளியீடுஇளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுநீட் நுழைவுத்தேர்வு நாளை
ShareTweetSendShare
Previous Post

கள்ளழகர் விழாவில் துடைக்கப்படுமா கண்ணீர்? : தோல் பை தொழிலாளர்கள் வேண்டுகோள்!

Next Post

இந்திய ராணுவத்தால் அச்சம் : பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாக்கும் பாகிஸ்தான்!

Related News

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies