நீட் தேர்வு - வழிகாட்டுதல்கள் வெளியீடு!
Aug 7, 2026, 04:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

நீட் தேர்வு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Murugesan M by Murugesan M
May 3, 2025, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களைத் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் தேர்வர்கள் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்களைத் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்வு நாளன்று, தேர்வர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தேர்வு நேர அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என்றும், சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு வருவது அவசியம் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆண் தேர்வர்கள் பாதுகாப்பு மற்றும் சோதனை நடைமுறைகளுக்கு ஏற்ப எளிமையான, வசதியான ஆடைகளை அணிய வேண்டும் என்றும், தேவையற்ற தாமதங்கள், தகுதியிழப்புக்கு வழிவகுக்கும் ஆடை மற்றும் ஆபரணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆண் தேர்வர்கள், வெளிர் நிற அரைக்கை சட்டைகள், எளிமையான கால் சட்டைகள், மெல்லிய காலணிகளை அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பெண் தேர்வர்கள் ஆபரணங்கள் மற்றும் அலங்காரங்கள் இல்லாமல்  எளிய ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விரிவான வடிவமைப்புகள் இல்லாத வெளிர் நிற அரைக்கை குர்திகள், சல்வார் அல்லது பேண்ட்டுகள், செருப்புகள் அல்லது குறைந்த உயரம் கொண்ட ஹீல்ஸ் செருப்புகளை அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி வடிவம் கொண்டவை, ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பரமான ஆபரணங்கள், நகைகள், அதிக உயரம் கொண்ட ஹீல்ஸ்கள், ஷூக்கள், மூடிய நிலையில் வடிவமைக்கப்பட்ட காலணிகளை அணிந்து வர கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையத்திற்குத் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு நகல், வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்கு ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாள அட்டை, பால்பாயிண்ட் பேனா எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள், கால்குலேட்டர்கள், ப்ளூடூத் சாதனங்கள், பணப்பைகள், கைப்பைகள், சன் கிளாஸ்கள், அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட குறிப்புகள், துண்டு சீட்டுகள், சாப்பிடக்கூடிய பொருட்களை எடுத்துவரக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வர்கள் சரிபார்ப்பு, சோதனை நடைமுறைகளை முடிக்க ஏதுவாக முற்பகல் 11 மணிக்குள் தேர்வு மையத்தை அடைய வேண்டும் என்றும், மதியம் 1.30 மணிக்குப் பின்னர் தேர்வு மையம் உள்ளே அனுமதி இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: NEET Exam - Guidelines Releasedநீட் தேர்வு - வழிகாட்டுதல்கள் வெளியீடுஇளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுநீட் நுழைவுத்தேர்வு நாளை
Share
Tweet
SendShare
Previous Post

கள்ளழகர் விழாவில் துடைக்கப்படுமா கண்ணீர்? : தோல் பை தொழிலாளர்கள் வேண்டுகோள்!

Next Post

இந்திய ராணுவத்தால் அச்சம் : பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாக்கும் பாகிஸ்தான்!

Related News

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies