பாகிஸ்தான் சைபர் தாக்குதல் : வெற்றிகரமாக முறியடித்த  இந்திய நிபுணர்கள்!
Aug 6, 2026, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் சைபர் தாக்குதல் : வெற்றிகரமாக முறியடித்த  இந்திய நிபுணர்கள்!

Murugesan M by Murugesan M
May 5, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானுக்குச் சரியான பதிலடியை அடுத்தடுத்து இந்தியா கொடுத்து வருகிறது. சைபர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஹேக்கர்கள் சதியை இந்தியா வெற்றிகரமாக முறியடித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவுக்கு எதிரான சைபர் தாக்குதல்களில் மீண்டும் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர் குழுக்களான “Cyber Group HOAX1337” மற்றும் “National Cyber Crew”  ஆகியவை இந்திய இராணுவ இணையதளங்களுக்குள் ஊடுருவ முயற்சி செய்து தோல்வியடைந்துள்ளன.

இராணுவ நர்சிங் கல்லூரி, இராணுவ பொதுப் பள்ளிகள், இராணுவ நல வீட்டுவசதி அமைப்பு, இராணுவ நல வேலைவாய்ப்பு அமைப்பு மற்றும்  பிற இந்திய ராணுவம் தொடர்பான இணையத்தளங்களைக்  குறிவைத்து இந்த சைபர் தாக்குதல்களைப் பாகிஸ்தான் நடத்தியுள்ளது.

நகரோட்டா மற்றும் சுஞ்சுவானனில் உள்ள இராணுவ பள்ளி இணையதளத்தை முடக்கவும், அதில், பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியான இந்துக்களை அவமதிக்கும் வகையில் பொய்ச்செய்திகளை வெளியிடவும் முயற்சி நடந்துள்ளது. மேலும் ஹோட்டல் மேலாண்மைக்கான இராணுவ பள்ளி மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கான மருத்துவச் சேவைக்கான இணைய தளத்தை முடக்கவும் முயற்சி நடந்துள்ளது.

முக்கியமான மத்திய அரசின் நெட்வொர்க் அமைப்புக்கள் உள்ளே ஊடுருவ முடியாத விரக்தியில், பாகிஸ்தான் ஹேக்கர்கள்,குழந்தைகள், கல்வி மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த இணையதளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தியாவின் உயர் அடுக்கு சைபர் பாதுகாப்பு கட்டமைப்பைத் தாண்டி,பாகிஸ்தான் ஹேக்கர்களால் ஊடுருவ முடியவில்லை. பாகிஸ்தானில், இந்த சைபர் தாக்குதல்களை அடையாளம் கண்டு, உடனடியாக இந்திய சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

இந்த சைபர் தாக்குதல்களில், ‘பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அறிக்கை & புதுப்பிப்பு’ என்ற தலைப்பில் ஒரு தீங்கிழைக்கும் PDF கோப்பு, அனுப்பப்பட்டிருப்பதை  இந்திய சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்,நீண்ட காலமாகவே டிஜிட்டல்  போரையும்  நடத்தி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இருநாடுகளின் ( DGMO) டிஜிஎம்ஓக்களுக்கு இடையேயான வாராந்திர HOTLINE பேச்சுவார்த்தையிலும் பாகிஸ்தான் நடத்தும் டிஜிட்டல் அத்துமீறல் குறித்து இந்தியா எச்சரித்திருந்தது.

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு,10 லட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களைப் பதிவு செய்துள்ளதாக மகாராஷ்டிரா சைபர் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானைத் தவிர, மத்திய கிழக்கு நாடுகள், இந்தோனேசியா மற்றும் மொராக்கோவிலிருந்தும் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளுக்கு விசுவாசமாக இருக்கும் பல ஹேக்கர் குழுக்கள் இந்தியா மீதான சைபர் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவை ஆத்திரமூட்டும் வகையில்,பாகிஸ்தான் சைபர் தாக்குதல்களை மீண்டும் நடத்தி இருப்பது, தங்கள் பொறுமையையும், நிதானத்தையும் சோதிப்பது போல் தெரிகிறது என்று இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு மட்டும், பாகிஸ்தான் இராணுவம் 15 முறைப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. 2,651 முறை   எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டருகே, பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. மூன்று முறை பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது.

இதற்கிடையே, இந்தியக் கடற்படை தனது போர் தயார்நிலை மற்றும் செயல்பாட்டுத் துல்லியத்தை உறுதிப்படுத்தும் விதமாக, ஏவுகணை அழிப்பு கப்பலான INS சூரத் கப்பலில், எதிர்ப்பு ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எப்படியும் துல்லியமாகத் தாக்குதல் நடத்த முடியும் எனக் குறிப்பிட்டு, இந்தப் போர்ப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடுதலாக வான்வழிப் போர்முனையில்,இந்திய விமானப்படையும் தயார் நிலையில், போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன.

பகல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில்,  பாகிஸ்தானின்  சைபர் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

Tags: இந்திய நிபுணர்கள்tamil janam tvPakistani cyber attack: Indian experts successfully thwartedபாகிஸ்தான் சைபர் தாக்குதல்பகல்காம் பயங்கரவாத தாக்குதல்
Share
Tweet
SendShare
Previous Post

உண்மைக்குப் புறம்பாக அறிக்கை வெளியிட்ட காவல்துறை – மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு!

Next Post

சுட்டெரிக்கும் வெயில் : வெப்பத்தை தணிக்க குளிர்ச்சியூட்டும் வெட்டிவேர் மாலை – சிறப்பு தொகுப்பு!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies