பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன் காரணமாக, இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், விமானப்படைத் தளபதி மார்ஷல் ஏ.பி. சிங் மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பாதுகாப்புத்துறைச் செயலர் ராஜேஷ்குமார் சிங் பிரதமரை சந்தித்து பேசினார். பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.